Friday, March 25, 2016

சொற்கலவி



உருவழி விளையாட்டு
உணர்வழி உன்மத்தம்
புனையாத புனைவெளி
கண்கட்டுக் காட்டுவழி
அறியாத் திருமுகத்தின்
கண்ணிமை இரக்கம்
சொற்கலவி ஆகாசம்
அர்த்தம் வண்ணபலூன்
தொலைவானிலென்
தயங்கும் கிறுக்கும்
தாரகைத் துணுக்கு
துளி ஒளியுமிழ்ந்து
உத்வேகம் மனோவேகம்
தலை சுக்குநூறு கோடி
தரைதட்டிச் சிதறும்
தானெனும் தடாகம்
அலையலையலை
அலைநிலைகுலை
என்தேர் அதிர்ந்தால்
பிரதி என் பிரதி



















(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

1 comment:

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்