Saturday, October 2, 2010

நூலை இழுக்க அசையும் பொம்மை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (8)

ஒவ்வொருவனுக்கும் தெரியவேண்டும்
இது எல்லாமே வெகு சீக்கிரம்
மறையக்கூடிய தென்று:
பூனை, பெண், வேலை,
முன்பக்க டயர்,
படுக்கை, சுவர்கள்,
அறை; நம் எல்லாத் தேவைகளும்
காதல் உட்பட,
மணலின் அஸ்திவாரங்களில் நிற்பன –
கொடுக்கப்பட்ட எந்த காரணமும்
எப்படித் தொடர்பின்றிப் போனாலும்:
ஹாங்காங்-கில் ஒரு சிறுவனின் சாவு
அல்லது ஒமாஹாவில் ஒரு பனிப்புயல்
குலைத்துவிடக்கூடும் உன்னை.
சமையலறைத் தரைமேல்
உன் எல்லாப் பீங்கான்களும் மோதி உடைய
உன் ஆள்—அந்தப் பெண் நுழைவாள் நீ
குடிபோதையில் நிற்கும்போது,
எல்லாவற்றுக்கும் நடுவில்,
அவள் கேட்பாள்:
கடவுளே, என்ன விஷயம்?
நீ பதில் சொல்வாய்: எனக்குத் தெரியாது,
எனக்குத் தெரியாது …

No comments: