Friday, June 18, 2010

ஆமாமாம்: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (4)

காதலைக் கடவுள் உருவாக்கியபோது
அவர் உதவவில்லை நிறையபேருக்கு
நாயைக் கடவுள் உருவாக்கியபோது
அவர் உதவவில்லை நாய்களுக்கு
செடிகளைக் கடவுள் உருவாக்கியபோது அது சராசரியே
வெறுப்பைக் கடவுள் உருவாக்கியபோது
நமக்குக் கிடைத்தது ஒரு நிரந்தர பலன்
என்னைக் கடவுள் உருவாக்கியபோது என்னை அவர் உருவாக்கினார்
குரங்கைக் கடவுள் உருவாக்கியபோது அவர் தூக்கத்திலிருந்தார்
ஒட்டகச்சிவிங்கியை அவர் உருவாக்கியபோது அவர் குடித்திருந்தார்
போதைமருந்துகளை அவர் உருவாக்கியபோது அவர் உச்சத்திலிருந்தார்
தற்கொலையை அவர் உருவாக்கியபோது அவர் நீச்சத்திலிருந்தார்

படுக்கையில் படுத்தபடி உன்னை அவர் உருவாக்கியபோது
அவர் செய்துகொண்டிருந்தது அவருக்குத் தெரிந்தது
அவர் குடித்திருந்தார் அவர் உச்சத்திலிருந்தார்
மேலும் மலைகளையும் கடலையும் நெருப்பையும் அதேநேரத்தில் உருவாக்கினார்

சிலதவறுகளை அவர் செய்தார்
ஆனால் படுக்கையில் படுத்தபடி உன்னை அவர் உருவாக்கியபோது
அவரின் ஆசிர்வதிக்கப்பட்டப் பிரபஞ்சத்தின் மேலெல்லாம்
அவருக்கு வந்துவிட்டது.

No comments: