Sunday, August 10, 2008

இப்படி பலரும்

அலைச்சலாகவே ஆனவன்
தன் அறையில் நடக்கும்போதும்
உலகத்தைச் சுற்றிவிடுகிறான் பலமுறை.
அமர்ந்து அவன் கணினியின் திரையில்
ஒரு சுட்டியைச் சொடுக்கும்போதும்
ஓராயிரம் சுட்டிகளாய் நிரம்பி
மேசைமீது வழிந்துவிடுகின்றன.
அவசரமாய் அவற்றை அள்ளிவைக்கும்
அவன் கைகளிலும் சக்கரங்கள்.
துயிலறியாத அவன் விழிகளின்
கங்கிலிருந்து
நேற்று ஒருத்தி
தன் சிகரெட்டுக்காக
நெருப்பு எடுத்துக்கொண்டாள்
என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

1 comment:

கோநா said...

பெருந்தேவி,
நம்புகிறோம்.இப்படி பலரும்(ஆண்கள்) கண்களில் எரிச்சலுடனும்,பெண்கள் தங்கள் சிகரெட்டுக்கு நெருப்பாக அதை தொட்டுக் கொண்டும்... :)