Tuesday, July 15, 2008

E.E. Cummings (3): யாருக்குத் தெரியும், நிலாவோ

வானத்தில் அழகிய மாந்தர் நிரம்பிய
ஆர்வமிக்க தொரு நகரத்திலிருந்து
வெளியேவரும் பலூன்
நிலாவோ,
யாருக்குத் தெரியும்?
(மேலும்
நீயும் நானும் அதில் நுழைந்தால்,
அவர்கள் உன்னையும் என்னையும்
அந்தப் பலூனில் ஏற்றிக்கொண்டால்,
அழகிய மாந்தரோடெல்லாம் நாம்
வீடுகள் சிகரங்கள் மேகங்களுக்கும்
உயரே
ஏன் செல்லமாட்டோம்:
மிதந்தபடி தொலைவில் தொலைவில்
மிதந்தபடி
ஒருவரும் வருகைதந்திராத
ஆர்வமிக்க நகரத்துக்குள்,
எப்போதும்
அங்கே
வசந்தம்) மேலும் அங்கே
ஒவ்வொருவரும் காதலில்,
தாமே பறித்துக்கொள்ளும் பூக்களும்.

(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

No comments: