Saturday, June 21, 2008

குட்டிப்பன்றியே

புலனுக்குத் தெரியா வெறிநாய்களால்
வேட்டையாடப்பட்டு
குட்டிப்பன்றியாகக் குதறப்படுகிறாய்
என்று சொன்னது பொய்தானே?
நானோ
ஒவ்வொரு நடுஇரவும்
உனக்காகவே ஒரு ஆப்பிளை
கவனக்குறைவாக
உனக்காகவே
கத்தியால் கீறி
சில சொட்டுகளைச்
சிந்துவது தவறாது
கடற்கரை நெடுஞ்சாலையில்
தம்மைப் பிணித்தபடி
செல்லும் காதல்பிணி கொள்ளா
காதலர்கள்
சிரிப்பை அறைகிறார்கள்
முகத்தில்
அந் நேரமும்
ஏன் ஏன்
எதிரே அலங்காரக்கடையின்
வண்ணவிளக்குகளில்
ஒன்றாகத்
தன்னை மாட்டித்திரிகிறது நிலா
அதில் தெரியக்கூடாது
உன் முகம் ஒருபோதும்
என்று
என் விழிப்புலனை
பிய்த்
தனுப்பினால்
நீ
கவனமாகப் பிரித்து
தாயத்தாக
உன் பல்
களில் இடுக்கிக்கொள்
என் குட்டிப்பன்றியே

No comments: