Saturday, May 10, 2008

கிளி ஏழு: படையல்

படையல்


வருஷம் இருநூறு இரவுகள்
திரௌபதி வேஷம் கட்டுவதால்
பெண்ணாகவும்
தான் ஆனதாக
ஆட்டம் தொடங்குமுன்
அல்லிப்பூ சொல்லிக்கொண்டிருந்தான்.
அவளின்
விரிகூந்தலென
நீண்டதொரு கோலை
துச்சன் இழுத்துவந்த
நடுயாமத்தில்
செங்கண் வரிகள்
ஆயிரமாயிரம் ஆகின
அவள் விழிகள்.
பிரளயச் சுழலுற்றன
ஆயிரமாயிரம் அவள் கால்கள்.
சாபங்களில் புடைத்தன
ஆயிரமாயிரம் அவள் வாய்கள்.
பதறிய கிளியின் ஆட்டம்
பாழ்மணி சிதறியது.
சாவுகளை அறிவித்துச்
சமைந்த தெய்வத்தின்
களைப்பு தீர
முன்வைக்கப்பட்டது
ஒரு க்ளாஸ் டீ.
அவள் வியர்வையின் வண்ணப்
பொடி துளி சொட்டியது.
நான் பார்த்ததை
பார்த்த
அல்லிப்பூ
கலைந்து சிரித்தான்
ஆணைப் போலவே
கூச்சத்தோடு.

No comments: